திருவனந்தபுரம்: கேரள தலைமைச் செயலகத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து மின்கசிவால் ஏற்படவில்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கேரள தடவியல்துறை அறிக்கை தாக்கல் செய்தது. மின்விசிறியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கேரள அரசு தரப்பில் ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.