சென்னை: சென்னை செங்குன்றம் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெங்கர் லாரியில் தண்ணீருக்குப் பதில் 400 கிலோ கஞ்சாவை அடைத்து தமிழகத்துக்கு கடத்தியவர்கள் 2 பேரை மாதவரம் தனிப்படை போலீஸ் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.