நாமக்கல்: தமிழகம் முழுவதும் அக்.9-ம் தேதி முடிதிருத்தும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாக சவரத் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் அருகே சவரத் தொழிலாளியின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர். இதனை தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்க மாநில பொருளாளர் ராஜா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கூறியுள்ளார்.