×

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதல்வராவார் : இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு

வத்திராயிருப்பு, : சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதல்வராவார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் யிலுமுத்து படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலளாளா் லிங்கம் தலைமை வகித்தார். சுந்தரபாண்டியம் செயலாளா் பால்ராஜ் முன்னிலை வகித்தார்.  வெயிலுமுத்து திருவுருவ படத்தை கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘திமுக கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி. சட்டமன்ற தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதல்வராவார். அதிமுக கூட்டணி முரண்பட்ட கூட்டணி. கூட்டணியிலுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேளாண் சட்டத்தை எதிர்கிறார். எடப்பாடி பழனிசாமி வேளாண் சட்டத்தை ஆதரிக்கிறார்.பெரியார் சிலை அவமரியாதை செய்யப்படுகிறது. உடனே மனநலம் பாதித்தவன் செய்ததாக தமிழக அரசு கூறுகிறது. பெரியார் சிலையை மட்டும் எப்படி மனநலம் பாதித்தவனுக்கு தெரியும். மோடி அரசு கொரோனா  விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் இந்தியா முழுவதும் அந்த நோய் பரவியது.

கொரோனா ஊரடங்கால் மக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளா்களுக்கு ரூ.7500, பொதுமக்களுக்கு ரூ.5000 கொரோனா நிவாரணமாக வழங்க பல போராட்டங்கள் நடத்தியும் அரசுகள் கண்டுகொள்ளவில்லை. பட்டாசு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் இன்னமும் சீரான நிலைக்கு வரவில்லை’ என்றார்.

Tags : alliance ,DMK ,Mutharajan ,Stalin ,Indian Comm , Assembly, Election, DMK, Victory, M.P. Stalin, Mutharajan, speech
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி