×

சசிகலா காலில் விழுந்து சரணடைபவர்களே முதல்வர் வேட்பாளர் : அதிமுக சர்ச்சை குறித்து திண்டுக்கல் லியோனி கருத்து!!

சென்னை: சசிகலா காலில் விழுந்து சரணடைபவர்களே முதல்வர் வேட்பாளர் என்று திண்டுக்கல் லியோனி கிண்டலாக தெரிவித்துள்ளார்.திமுக கொள்கை பரப்பு செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் ஐ.லியோனி, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் உட்பட எல்லோருக்குமே நாற்காலிகள் மீது ஆசை உள்ளது. என்னை பொறுத்தவரை முதல்வராக இருவருமே தகுதி இல்லாதவர்கள். சசிகலா வந்த பிறகு அவரிடம் யார் முழுமையாக சரண்டர் ஆகிறார்களோ அதன் பின் அவர்களே முழு கட்சி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, முதல்வர் வேட்பாளராகவும் வருவார்கள், என்றார்.

இதனிடையே தேனியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த ஓபிஎஸ் நேற்று பகவத் கீதையை மேற்கோள் காட்டி ட்விட்டரில் பதிவிட்டார். அந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ.பன்னீர் செல்வத்தின் ட்விட்டர் பதிவு பற்றியும் கிண்டலடித்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் திண்டுக்கல் ஐ. லியோனி,எது காலில் விழுந்ததோ அது நன்றாகவே விழுந்தது. எது காலில் விழுகிறதோ அதுவும் நன்றாகவே விழுகிறது. எது நாளை சின்னமா காலில் விழுகிறதோ அது நன்றாகவே விழும் இதுவே ஓ.பி.எஸின் பகவத் கீதை ட்வீட்க்கு உண்மையான அர்த்தம். விரக்தியில் இருக்கும் போதுதான் ஒரு மனிதன் பேசுவான். இந்த தத்துவங்களை எல்லாம் வாழ்க்கை முடியப்போகும் நேரத்தில்தான் பேசுவார்கள். தத்துவங்களை ஒரு மனிதன் நிறைய பேசுகிறான் எனில் வாழ்க்கையின் விளிம்பு நிலைக்கு ஒரு மனிதன் போய்விட்டான் என்றுதான் அர்த்தம். அப்படிதான் ஓ.பி.எஸ் பகவத் கீதையை மேற்கொள் காட்டி உள்ளார், என்றார்.

Tags : Dindigul Leoni ,AIADMK , Tamil Nadu, S.C. Reservation, Government of Tamil Nadu, MP Ravikumar, Request...
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...