×

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வழக்கு : ஓய்வு நீதிபதி தலைமையில் சிறப்பு குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை!!

புதுடெல்லி: :ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் வெளியில் வைத்து விசாரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது உத்தரப்பிரதேச காவல்துறையினர் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளதாக பல்வேறு தரப்பில் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதில் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,ஹத்ராஸ் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் இதில் நடந்த உன்மை என்னெவென்று வெளிப்படையாக தெரியவரும்.மேலும் சிபிஐ விசாரணையாகவே இருந்தாலும் கூட ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் தான் அது நடைபெற வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றால் அது நிச்சயம் நியாயமானதாக இருக்காது என்பதால் வழக்கை டெல்லிக்கு மாற்றி, அதனை நடத்தி முடிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சிறப்பு குழு அமைக்கப்படுமா என்பது தெரியவரும்.

Tags : judge ,Supreme Court ,panel , World, Corona, Countries, India, First...
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...