×

சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஷார்ஜாவில் கடந்த சனிக்கிழமையன்று டெல்லி - கொல்கத்தா அணிகளிடையே நடந்த ஐபிஎல் டி20 போட்டியின்போது, அரியானா மாநிலம் ரிவாரியில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடியிருப்பு பகுதி ஒன்றில் அதிரடி ரெய்டு நடத்திய போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5,71,900 மற்றும் 12 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

Tags : 3 arrested for gambling
× RELATED பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்