×

பொதட்டூர்பேட்டை அருகே முட்புதரில் கிடந்த பச்சிளங் குழந்தை மீட்பு

பள்ளிப்பட்டு: பொதட்டூர் அருகே முட்புதரில் கிடந்த பச்சிளங் குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை வராக சுவாமி திருக்கோயில் பகுதியில் நேற்று அதிகாலை குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலர் தேடிப் பார்த்தனர். அப்போது முட்புதரில் பிறந்து ஒரு சில மணி நேரங்களே ஆன பெண் பச்சிளங்குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அக் குழந்தைக்கு சிகிச்சை அளித்து குழந்தை நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை முட்புதரில் வீசி விட்டு சென்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன பச்சிளங்குழந்தை  முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பொதட்டூர்பேட்டை யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : baby ,Pothatturpet ,bush , Rescue of a green baby lying in a bush near Pothatturpet
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி