சென்னை: ஹத்ராஸ் அராஜகத்தை கண்டித்து பேரணி சென்ற திமுக மகளிரணியை காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கை உ.பி கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் நடக்கிறதா? அதிமுக அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.