சென்னை: உ.பி.யில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே காங்கிரசார் சத்தியாகிரக அறவழி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு மற்றும் விஜய் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.