×

நாமக்கல்லில் பூட்டிருந்த தொழிலதிபரின் வீட்டை உடைத்து 20 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பூட்டிருந்த தொழிலதிபரின் வீட்டை உடைத்து 20 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அடுத்த இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அவென்யூவில் வசித்து வருபவர் தொழிலதிபர் பொர்கோ, இவர் டயர் விற்பனையகம், கேஸ் ஏஜென்ஸி நடத்தி வருகிறார். இவர் தனது தந்தைக்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக மனைவி, இரு மகள்களுடன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில்,இன்று அதிகாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அறைக்குள் வைத்திருந்த சுமார் 20 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனையடுத்து, நாமக்கல் காவல் நிலையத்திற்கு பொற்கோ அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : businessman ,house ,Police investigation ,Namakkal , Namakkal, robbery, police, investigation
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்