×

குப்பைகளை எரிப்பதால் பஸ் ஸ்டாப் சுவர் சேதம்

உடுமலை: கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகரில் குப்பைகளை எரிப்பதால் பஸ் ஸ்டாப் சுவர் சேதமாகி வருகிறது. உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகரில் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. வீதியெங்கும் சிதறி கிடக்கிறது. பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தில், குடிநீர் தொட்டி, ரேஷன் கடை, பஸ் ஸ்டாப் உள்ளது. குப்பைகளுக்கு சிலர் தீவைத்து செல்கின்றனர். இதனால் குப்பை எரிந்து அப்பகுதியில் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது.

இது ரேஷன் கடைக்கு வருவோருக்கு இடையூறாக உள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது.தொடர்ந்து தீ எரிவதால் பஸ் ஸ்டாப் சுவரில் விரிசல் விட்டு சேதமடையும் நிலை உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் அங்கு குப்பையை தேங்க விடாமல் உடனுக்குடன் அள்ள வேண்டும். தீ வைப்பதையும் கண்காணித்து தடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Debris, burning, bus stop, wall damage
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி