சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் அக்.9-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கவுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.