மதுரை: ‘பல துரோகிகளை அதிமுக சந்தித்துள்ளது’ என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாமில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் துரோகம் இருக்கத்தான் செய்தது. பல துரோகிகளை அதிமுக சந்தித்துள்ளது, அதிமுக உண்மையான ஜனநாயக இயக்கமாக உள்ளது. முதல்வரும், துணைமுதல்வரும் மக்களுக்காக, தமிழக பிரச்னைக்களுக்காக டெல்லி சென்றனர். கோஷ்டிபூசலை சொல்லி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஜனநாயக இயக்கம் என்றால் கோஷ்டிபூசல் இருக்கத்தான் செய்யும். அதிமுக தலைமைக்கழகம் என்பது தொண்டர்கள் ரத்தம் சிந்தி உருவாக்கிய சொத்து’’ என்றார்.