×

தங்கை என்றும் பாராமல் அக்கிரமம் திருமணமான பெண்ணை அடைய கூடவே இருந்து குழி பறித்த டாக்டர்: ஆபாச படம், மொட்டை கடிதங்கள் அனுப்பி வக்கிரம் உடந்தையாக இருந்த டிவி நடிகர் உட்பட 3 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கை முறையாகும் இளம்பெண்ணை அடையும் ஆசையில் கணவர், உறவினர்களுக்கு மொட்டை கடிதங்கள், ஆபாச படங்களை அனுப்பிய டாக்டர், டிவி நடிகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே வர்க்கலா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுபு. அரசு  பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் மகள் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார். சுபுவுக்கு அவர் தங்கை முறை. இருந்த போதிலும் அந்த பெண்ணை 2வதாக திருமணம் செய்ய  விரும்பினார். அதற்காக, தம்பதியை பிரிக்க சதி செய்து வந்தார்.

இதையடுத்து, இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி, அவரது கணவருக்கு மொட்டை கடிதம் அனுப்பினார். இது பற்றி வர்க்கலா போலீசில் கணவர் புகார் செய்தார். அப்போது, டாக்டர் சுபுவும் உடன் சென்றார்.
இந்நிலையில், இளம்பெண், கணவர், உறவினர்களின் செல்போன்களுக்கு இளம் பெண்ணின் ஆபாச படங்கள் வாட்ஸ்-அப்பில் வந்தன. இதைக்கண்டு இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். கணவர் தான் ஆபாச படங்களை அனுப்பி இருக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்து, போலீசில் அவர் புகார் செய்தார். அப்போதும், அவருடன் சுபு சென்றார்.

இது தொடர்பாக விசாரிக்க, உதவி கமிஷனர் பிரதாப சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதி பிரிந்தனர். செல்போன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு போலீசார் தகவல்  சேகரித்தனர். இதில், நெடுமங்காடு அருகே ஆநாடு பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் (30), ஆபாச படங்களை அனுப்ப பயன்படுத்திய சிம் கார்டை வாங்கியுள்ளார் என்பது தெரிந்தது. அவர் அந்த சிம் கார்டை, தனது நண்பரான டிவி சீரியல் நடிகர் ஜாஸ்மிர்கானுக்கு கொடுத்துள்ளார். இவர் ஏராளமான டிவி தொடர்களில் நடித்துள்ளார். இவரும், டாக்டர் சுபுவும் நண்பர்கள். சுபு கூறியபடி ஜாஸ்மிர்கான் அந்த செல்போனில் இருந்து இளம்பெண்ணின் படங்களை மார்பிங் செய்து அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

* ஆதார் மோசடி மூலம் வாங்கப்பட்ட சிம்கார்டு
கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீஜித், அதே பகுதியில் செல்போன் ரீசார்ஜ், ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவர் தனது கடைக்கு வந்த வட்டப்பாறையை சேர்ந்த வாலிபரின் ஆதார் அட்டையை அவருக்கு தெரியாமல் ஜெராக்ஸ் எடுத்துள்ளார். அதை பயன்படுத்தி, அவருடைய பெயரிலேயே சிம் கார்டு வாங்கியுள்ளார். அதை பயன்படுத்தியே இளம்பெண்ணுக்கு எதிரான சதிகளை செய்துள்ளனர்.

* தம்பதியை சேர்த்து வைத்த போலீசார்
டாக்டர் சுபு, நடிகர் ஜாஸ்மிகர்கானின் மோசடியால் பிரிந்து வாழ்ந்த தம்பதியை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்தனர். அவர்களுக்கு அறிவுரைகள் கூறி, இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வழி வகுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட தம்பதியினர், சேர்ந்து வாழ்வதற்காக மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Tags : Doctor , Doctor arrested for trespassing on a married woman
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...