சென்னை: ரயில் பயணிகள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே தெரிவித்துள்ளது. அனைத்து ரயில் பெட்டிகளும் சானிடைசர் தெளித்து சுத்தம் செய்யப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. பயணிகள் முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.