×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல மருத்துவர் திருவேங்கடம் மரணம்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல மருத்துவர் திருவேங்கடம் நேற்று மரணம் அடைந்தார். இவர் பத்ம உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல மருத்துவர் திருவேங்கடம் நேற்று மரணம் அடைந்தார். தி.நகரில் தங்கி இருந்த அவர் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உருவ படத்திற்கு மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன் உள்ளிட்ட மருத்துவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1950 ம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்த இவர் 40 ஆண்டுகளுக்கு மேல் மார்பக நோய்கள், ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவரின் சேவையை பாராட்டி இந்து இந்தியன் செஸ்ட் சொசைட்டி என்ற அமைப்பு சிறந்த மருத்துவருக்கான விருதை ெபற்றுள்ளார். இதைத்தவிர்த்து ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி அறிவுரை குழு, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை மருத்துவ கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் குழுவில் பணியாற்றியுள்ளார். இவரின் மருத்துவ துறையில் இவரது சேவையை பாராட்டி 1981 ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


Tags : Thiruvenkadam ,Padma Shri , Corona, famous physician, Thiruvenkadam, death
× RELATED கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் லாரி உரிமையாளர் பலி