×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 14,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.30 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 14,348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,30,861-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 278 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 37,758-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 11,34,555 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 2,58,108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Maharashtra , In Maharashtra, 14,348 people were diagnosed with coronavirus in a single day today
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி