×

ஹிட்லர் போல் செயல்படும் பிரதமர் மோடி : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி,: உ.பி.யில் ராகுல்காந்தி மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து புதுச்சேரியில் சுதேசி மில் அருகே காங்கிரஸ் சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:மத்திய பாஜக மோடி ஆட்சியில் ஒவ்வொரு நாளும் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் 4 பேர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை மூடி மறைக்கும் முயற்சியை அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவத்துக்கு அவர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், ராகுல்காந்தியை போலீசார் தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு அராஜக செயலை உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு செய்துள்ளது. உ.பி முதல்வராக உள்ள யோகி ஆதித்யாவின் பின்னணி எனக்கு தெரியும். அவர் மீது 27 கொலை வழக்குகள் இருந்தன.இந்த நாட்டை மதவாத, பிரிவினைவாத, பாசிசத்தில் இருந்து விடுவிக்க நாம் ஒன்றுபட வேண்டும். பிரதமர் மோடி ஹிட்லரை போல் செயல்படுகிறார். அதை தடுத்து நிறுத்தும் சக்தி, நமது மதசார்பற்ற கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Modi ,Narayanasamy ,Puducherry ,Hitler , UP , Sex, Violence, Incident, West Bengal, Mamata Banerjee, Condemnation, Rally...
× RELATED கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு..