திருப்பூர்: திருப்பூர் அருகே திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மனம் உடைந்த அஜித்குமார், முத்துலட்சுமி தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இளம் தம்பதி தற்கொலை குறித்து உடுமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.