சென்னை: சென்னை ரிசர்வ் வங்கி ரயில்வே சுரங்கப் பாதையை அமைச்சர் ஜெயக்குமார் புதுப்பித்து திறந்து வைத்தபோது, பெருந்தலைவர் காமராஜர் பெயருடைய கல்வெட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உடனடியாக தமிழக அரசுக்கும், அமைச்சர் ஜெயக்குமாருக்கும், பெருந்தலைவர் திறந்து வைத்த கல்வெட்டை புதுப்பிக்க வேண்டும் என கடிதம் எழுதினார்.
அதன்பேரில் பெருந்தலைவர் கல்வெட்டை தமிழக அரசு புதுப்பித்தது. புதுப்பிக்கப்பட்ட பெருந்தலைவர் திறந்துவைத்த பாலத்தின் கல்வெட்டை இன்று சமத்துவ மக்கள் கழக நிறுவனத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது, நிர்வாகி கண்ணன், தங்கமுத்து, பாஸ்கர், தனசெல்வம், தயாநிதி, ராஜேஷ், ஜஸ்டின் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.