×

நாட்டின் பாதுகாப்பை விட மேலானது எங்களுக்கு வேறு எதுவும் இல்லை: அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்து பிரதமர் மோடி உரை.!!!

மணாலி: இமாச்சல பிரதேசம் ரோதங் கணவாய்க்கு கீழே மணாலி - லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் வகையில் அடல் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. கடல்  மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் இமய மலையின் பிர் பஞ்சால் மலைத் தொடரை குடைந்து 9.02 கிமீ தூரத்திற்கு ரூ.3,300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத்திட்டம் நிறைவேறிய இன்றைய நாள் சிறப்பானது. அடல் பிகாரி  வாஜ்பாய் ஆட்சியின் போது சுரங்கச் சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்ததை பெருமையாக கருதுகிறேன். பல ஆண்டு கால காத்திருப்பு  இன்று முடிவுக்கு வந்துள்ளது. எல்லை பாதுகாப்பை வலுவாக்கிட சுரங்கப் பாதை உதவும். அடல் சுரங்கப்பாதை இந்தியாவின் எல்லை உள்கட்டமைப்புக்கு புதிய பலத்தை  அளிக்கும். இது உலகத்தரம் வாய்ந்த எல்லை இணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு. கடந்த அரசு வேகமாக செயல்படுத்தாததால் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை நாங்கள்  விரைவுப்படுத்தினோம்.

அடல் ஜி 2002-ல் இந்த சுரங்கப்பாதையின் அணுகுமுறை சாலையின் அடித்தளத்தை அமைத்தார். 2013-2014 வரை இந்த சுரங்கப்பாதையின் 1,300 மீட்டரில்  மட்டுமே முன்னேற்றம் ஏற்பட்டது. 2014 க்குப் பிறகு, திட்டம் முன்னோடியில்லாத வேகத்தில் முன்னேறியது.
நாட்டின் பாதுகாப்பை விட மேலானது எங்களுக்கு வேறு எதுவும் இல்லை. ஆனால் நாட்டின் பாதுகாப்பு நலன்கள் சமரசம் செய்யப்பட்ட ஒரு காலகட்டத்தையும் நாடு கண்டது. உள்கட்டமைப்பு திட்டங்களில் ஏற்படும் காலதாமதம் பொருளாதாரத்தை வலுவிழக்க வைக்கிறது. சுரங்கச்சாலை மூலம் இமாச்சல மட்டுமல்லாது மணாலி-லடாக் மக்களின் வாழ்வாதாரமும் உயரும் என்றார். எல்லை உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் நன்மைகள் சாமானிய மக்களுக்கும் நமது ஆயுதப்படை வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றன. எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகள் உள்ளன, ஆனால் நீண்ட காலமாக, இதுபோன்ற திட்டங்கள் திட்டமிடல் கட்டத்திலிருந்து வெளியேற முடியவில்லை அல்லது நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டன. இணைப்பு வளர்ச்சியுடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் இணைப்பு நேரடியாக பாதுகாப்பு சிக்கல்களுடன் தொடர்புடையது என்றார். தொடர்ந்து, நிகழ்ச்சி முடித்து, பிரதமர் நரேந்திர மோடி ரோஹ்தாங்கில் உள்ள அடல் சுரங்கப்பாதையின் தெற்கு போர்ட்டலில் இருந்து லஹால் பள்ளத்தாக்கின் சிசுவில் அமைந்துள்ள சுரங்கப்பாதையின் வடக்கு போர்ட்டலுக்கு பயணம் செய்கிறார்.

Tags : Modi ,country ,speech ,Atal tunnel. , We have nothing more than the security of the country: Prime Minister Modi's speech to open the Atal tunnel. !!!
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...