சென்னை : தமிழகத்தில் பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு.பழனிசாமி அவர்களின் அறிக்கை - 3.10.2020
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த திரு. பகவதி நாடார் என்பவரின் மகன் திரு. ராமையா என்பவர் மின்கம்பத்தின் பக்கவாட்டு கம்பியை எதிர்பாராத விதமாக பிடித்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
அகஸ்தீஸ்வரம் வட்டம், தென்தாமரைகுளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. தங்கநாடார் என்பவரின் மகன் திரு. நந்தகுமார் என்பவர் தெருவிளக்கு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமத்தைச் சேர்ந்த திரு. மார்க்கண்டன் என்பவரின் மனைவி திருமதி விஜயலட்சுமி என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பூவற்றக்குடி சரகம், வடக்கு கிராமத்தைச் சேர்ந்த திரு. மெய்யப்பன் என்பவரின் மகன் திரு. ஜெய்சங்கர் என்பவர் மின்மாற்றியில் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
கறம்பக்குடி வட்டம், தென்மழையூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமன் என்கிற ராமையா என்பவரின் மகன் திரு. கருப்பையா என்பவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பெரியபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பொன்னுசாமி என்பவரின் மனைவி திருமதி சரோஜா என்பவர் புல் அறுக்க சென்ற இடத்தில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், மருங்காபுரி கிராமத்தைச் சேர்ந்த திரு. சக்திவேல் என்பவரின் மகன் திரு. விமல்காந்த் என்பவர் எதிர்பாராத விதமாக மின் கம்பத்தை தொட்ட போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், கோட்டைபட்டி மின்பகிர்மான அலுவலகத்தில் கம்பியாளராகப் பணியாற்றி வந்த திரு. ஆண்டி என்பவரின் மகன் திரு. ரெங்கநாதன் என்பவர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், தெள்ளூர் மதுரா வீராரெட்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சின்னசாமி என்பவரின் மகன் திரு. மதியழகன் என்பவர் தனது வீட்டினை சரிசெய்ய முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ருக்மணி என்பவரின் கணவர் திரு. பார்த்தீபன் என்பவர் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற போது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பாலி கிராமத்தைச் சேர்ந்த திரு. அருள்தாஸ் என்வரின் மனைவி திருமதி மங்கள நாயகி என்பவரின் மேல் எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், கீரணத்தம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கோவிந்தராஜ் என்பவரின் மகன் திரு. ராம்பிரசாத் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
கோயம்புத்தூர் வடக்கு வட்டம், கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பாக்கியநாதன் என்பவரின் மகன் திரு. சவுரிராஜ் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வட்டம், ஆதியூர் மதுரா வினாயகபுரத்தைச் சேர்ந்த திரு. மணி என்பவரின் மகன்
திரு. வெங்கடேசன் என்பவர் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.