×

இந்தியாவில் இஸ்லாமிய தேசத்தை உருவாக்க ஐஎஸ் தீவிரவாதிகள் சதி.. அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளை கொல்ல திட்டம் : என்ஐஏ பரபரப்பு தகவல்!!

டெல்லி : தமிழக வனப்பகுதிகளில் பயிற்சி முகாம்கள் அமைத்து நாச வேலைகளில் ஈடுபட ஐஎஸ் தீவிரவாதிகள் சதி செய்தது அம்பலம் ஆகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஜனவரி மாதம் வரை கைது செய்யப்பட்ட 17 ஐஎஸ் தீவிரவாதிகள் மீதும் என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த மெகபூப் பாஷா, கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீன், ஆகியோர் இணைந்து என்ற அல் - ஹிந்த் என்ற அமைப்பை உருவாக்கி தீவிரவாத பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை கொலை செய்யவும் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்ததாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தென் இந்திய வனப்பகுதிகளில் இஸ்லாமிய தேசத்தை கட்டமைக்கவும் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். அடர்ந்த வனப்பகுதிகளில் வாழும் முறை குறித்து அறிந்து கொள்ள சந்தன கடத்தல் வீரப்பன் குறித்த புத்தகங்களை தீவிரவாதிகள் வாங்கியதாகவும் என்ஐஏ கூறியுள்ளது. சிஏஏ, என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் பங்கேற்றதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய தேசத்தை கட்டமைக்க ஐஎஸ் தீவிரவாதிகள்  முயற்சித்ததாக தேசிய புலனாய்வு முகமை குற்றம் சாட்டி இருப்பது இதுவே முதன்முறையாகும். 


Tags : militants ,state ,India ,leaders ,NIA ,government officials , India, Corona, casualties, number, 1 lakh, treatment...
× RELATED தேர்தல் வன்முறையை தவிர்க்க...