புதுச்சேரி: புதுச்சேரி அருகே சேதாரப்பட்டில் உள்ள தனியார் ஒயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை முழுவதும் எரிவதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தொழிற்சாலையில் எரியும் தீயை அணைக்கும் பணியில் 8க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.