டெல்லி: அடல் சுரங்கப்பாதையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி சண்டிகர் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து, நிகழ்ச்சி நடைபெறும் இமாச்சலப்பிரதேசத்திற்கு ராணுவ ஹாலிகாப்டர் மூலம் செல்கிறார். காலை 10 மணியளவில் உலகின் மிகவும் உயரமான, நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.