×

அம்மையார்குப்பத்தில் வேளாண் மசோதவை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பட்டு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர் கே  பேட்டை ஒன்றியம் அம்மையார் குப்பத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம்  நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற  தலைவர் ஆனந்தி செங்குட்டுவன்  தலைமை வகித்தார் . ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயந்தி சண்முகம் முன்னிலை வகித்தார்.  திமுக,  காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், அச்சட்டத்தை ஆதரித்த அதிமுக அரசை கண்டித்தும்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சி.என்.சண்முகம், மாவட்ட நெசவாளரணி துணை  அமைப்பாளர் சி.எம்.இரவி,  கம்யுனிஸ்ட் நிர்வாகிகள் கணேசன், விநாயகம், வெங்கடேசன், உட்பட பலர் 50க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டம் செய்த 50 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.



Tags : Demonstration ,cancellation ,Ammayarkuppam , In Ammaiyarkuppam Agricultural bills Demonstration demanding cancellation
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்