சென்னை: சிங்கப்பூரிலிருந்து 172 இந்தியர்களும், அபுதாபியிலிருந்து 142 இந்தியர்களும், கத்தார் நாட்டின் தோகாவிலிருந்து 142 இந்தியர்களும், துபாயிலிருந்து 127 இந்தியர்களும் மொத்தம் 583 பேர் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் குடியுரிமை, சுங்கம், மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு அவரவர் வீடுகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த அனுப்பி வைக்கப்பட்டனர்.