×

கொரோனாவில் இருந்து குணமடைந்து விஜயகாந்த், பிரேமலதா வீடு திரும்பினர்

சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விஜயகாந்தும், அவரது மனைவியும் தேமுதிக பொருளாளரான பிரேமலதாவும் நேற்று மாலை  வீடு திரும்பினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 22ம் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை  செய்யப்பட்டது. அப்போது அவருக்கு ேமற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து விஜயகாந்த்  அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தது.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்தை, அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா உடன் இருந்து கவனித்து  வந்தார்.

இந்த நிலையில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, பிரேமலதாவுக்கு கொரோனா பாதிப்பு  இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 28ம் தேதி விஜயகாந்த் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே,  பிரேமலதாவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இரண்டு பேரும் மருத்துவ குழுவினரால் தொடர் மதிப்பீடு கண்காணிப்பில் இருந்து  வந்தனர். இரண்டு பேரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ்  செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கொரோனாவில் இருந்து  குணமடைந்து நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Tags : Vijaykanth ,home ,Premalatha , Recovering from corona Vijaykanth and Premalatha returned home
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...