தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரையில் சிலிண்டர் வெடித்து விசைப்படகு, கண்டெய்னர் லாரி எரிந்து சாம்பல் ஆகியுள்ளது. தீ விபத்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. படகில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்த போது சிலிண்டர் வெடித்து சிதறியது. தகவலறிந்த தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.