×

சென்னை மணலி புதுநகர் அய்யா கோயிலில் புரட்டாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.!!!

சென்னை: சென்னை மணலி புதுநகர் அய்யா கோயிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை மணலி புதுநகர் அய்யா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இதன்படி, இந்தாண்டு தேர் திருவிழா, திரு ஏடு வாசிப்பு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்குகள் முழங்க அய்யா சிவ சிவ அரகரா அரகரா என அய்யா வழி பக்தர்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

வரும் 11-ம் தேதி அடுத்த ஞாயிற்றுகிழமை வரை நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைசி நாளான வரும் 11-ம் தேதி தேரோட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கொடியேற்ற விழாவில் குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். இருப்பினும், அய்யா வழி பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அய்யாவை வழிபட்டு சென்றனர்.



Tags : festival ,Chennai. ,Manali Puthunagar Ayya Temple , The month of Purattasi festival started with the flag hoisting at Manali Puthunagar Ayya Temple in Chennai. !!!
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...