சென்னை: கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனாவை காரணம் காட்டி கிராம சபை கூட்டத்தை ரத்து செய்தது ஏற்கத்தக்கதல்ல என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். கொரோனாவை காரணம் காட்டி கிராம சபை கூட்டத்தை ரத்து செய்தது கண்டனத்திற்குரியது என்று பி.ஆர் பாண்டியன் கூறியுள்ளார். மத்திய அரசின் தூண்டுதலால் கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது என்று பி.ஆர் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.