×

தென்காசியில் 49, விழுப்புரத்தில் மேலும் 62 பேருக்கு கொரோனா உறுதி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,375ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 6,837 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 138 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,898ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,083 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில் 98 பேர் உயிரிழந்தனர்.

Tags : Corona ,Tenkasi ,Villupuram , Corona, Tenkasi, Villupuram
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...