திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கண்டிப்பாக மூடப்படவேண்டும் என திருவள்ளுர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.