×

பாகிஸ்தான் படை தாக்குதல் 3 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீர்: காஷ்மீர் ஜம்மு காஷ்மீரின், குப்வாரா மாவட்டத்தில் உள்ள நாகாம் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். சிறிய ரக குண்டுகள் வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் இந்த தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. இந்த சண்டையில், 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 4 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.


Tags : soldiers ,attack ,Pakistan , Kashmir Troops attacked Pakistani troops on the Nagam border in Kupwara district of Jammu and Kashmir yesterday.
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்