வாணியம்பாடி: பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உரிய நீதி வழங்கவில்லை என்று த.மு.மு.க.வினர் வாணியம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.