சென்னை: போதை தரக்கூடிய மருந்துகளை மாணவர்களுக்கு விற்கும் மருந்துக்கடைகள் மீது பதிவான வழக்குகள் எத்தனை? சம்மந்தப்பட்ட மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.