×

பெண்ணாக பிறப்பதே பாவமா ? : ராஜஸ்தானில் பயங்கரம்.. 3 நாட்கள் அடைத்து வைத்து இரு மைனர் சகோதரிகளை கூட்டு பலாத்காரம் செய்த 5 அரக்கன்கள்!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இரு நகரங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டு 3 நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் 19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் ஹாத்ராஸ் அருகே பல்ராம்பூரில் 22 வயது தலித் சிறுமி மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்ற சம்பவம் என நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் சம்பவங்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாரன் என்ற பகுதியை சேர்ந்த 13, 15 வயது சகோதரிகளை இருவரை இரு சிறுவர்கள் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டை விட்டு வந்துவிடுமாறு அழைத்துள்ளனர்.
இதை நம்பிய இரு சகோதரிகளும் கடந்த செப்டம்பர் 18ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அங்கிருந்து அவர்கள் கோட்டா, ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இரு சிறுவர்கள் மற்றும் மேலும் 3 பேர் இணைந்து பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து தனது 2 மகள்களை காணவில்லை என காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸார் தேடுதல் வேட்டையில் கோட்டாவில் இரு சிறுமிகளையும் செப்டம்பர் 21ம் தேதி கண்டுபிடித்தனர்.போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு சிறுமிகளும் மயக்கமருந்து கொடுக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறிய வாக்குமூலம் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இருவரும் பலாத்காரம் செய்யப்படவில்லை என கூறி வருகின்றனர்.

Tags : monsters ,sisters ,Rajasthan ,gang , Rajasthan, Terror, Two Minors, Gang Rape, Demons
× RELATED மெய்யத்து அனந்தசாயி