×

தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடைப்பு

கொள்ளிடம்: நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியிலிருந்து அளக்குடி செல்லும் வழியில் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் முதலைமேடு என்ற இடத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் மழையினால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக கரையில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

கொள்ளிடம் ஆற்றில் பருவமழை காலத்தில் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டால் கரை பலம் குன்றி இருக்கும் நிலையில் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரையோர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : river bank ,Kollidam , Rain, kollidam
× RELATED கொள்ளிடம் அருகே புத்தூரில் பாசன...