சென்னை: சென்னை தியாகராயர் நகரில் நூருல் யாகூப் என்பவர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் நகையுடன் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து, வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த காரையும் திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.