×

தூத்துக்குடி வாலிபர் கொலை: அதிமுக பிரமுகரை விசாரிக்க அனுமதி

கோவில்பட்டி:  தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லால் மகன் செல்வன் (32), கடந்த 17ம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக பிரமுகர் திருமணவேல்உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இவர்களில் திருமணவேல்உட்பட கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களிடம் 6 நாள் விசாரிக்க மாஜிஸ்திரேட் நேற்று அனுமதியளித்தார்.


Tags : youth murder ,Thoothukudi ,AIADMK , Thoothukudi youth murder: AIADMK leader allowed to investigate
× RELATED திருச்செந்தூரில் திமுக வேட்பாளர்...