சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி மேற்கொண்ட ஆலோசனை தற்போது நிறைவுப் பெற்றது. தமிழகத்தில் நாளையுடன் 8ம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் அளிக்க வேண்டிய தளர்வுகள், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனையானது நடைபெற்றுள்ளது.