×

கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை; ஓபிஎஸ்-ஈபிஸ் இருவருக்கும் எனது ஆதரவு: துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை; அதிமுக தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்தார். ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி அளித்துள்ளார். ஓபிஎஸ்-ஈபிஸ் இருவருக்கும் எனது ஆதரவு உண்டு என அவர் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு பெற்றது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

மேலும் செயற்குழுவில் நேற்று நடந்த விவாதம் கட்சியின் வளர்ச்சி குறித்தே நடைபெற்றது என கூறினார். அக். 7- ம் தேதி உரிய முடிவு தெரியவரும் எனவும் தகவல் தெரிவித்தார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே எந்த குழப்பமும் இல்லை எனவும் வைத்திலிங்கம் கருத்து தெரிவித்தார். ஓ.பி.எஸ். இல்லத்தில் நடந்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் இல்லை எனவும் கூறினார். நேற்று செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவித்தார்.


Tags : Vaithilingam ,party , Within the party, there is no confusion, OPS-EPS, support, Vaithilingam
× RELATED இதுவரை 440 எம்எல்ஏக்களை விலை கொடுத்து...