×

கொரோனா பாதிப்பு எதிரொலி: நாகர்கோவிலில் வங்கி, பிஎஸ்என்எல் அலுவலகம் மூடல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று 98 பேருக்கு புதிதாக தொற்று பரவி உள்ளது. இதையடுத்து தற்போதைய பாதிப்பு 12,513 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 11,303 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 990 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 223 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலக ஊழியர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, வாட்டர்டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் பூட்டப்பட்டு மருந்து தெளிக்கப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள வங்கி ஊழியரும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வங்கியும் பூட்டப்பட்டு மருந்து தெளிக்கப்பட்டது.

Tags : Corona ,BSNL ,Bank ,Nagercoil ,office closure , Corona, Bank, BSNL
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...