கும்மிடிப்பூண்டி: எளாவூர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆரம்பாக்கத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த ஷேர் ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். ஷேர் ஆட்டோவில் வந்த அழிஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்த சங்கர்(56) வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்தனர்.