ஆலந்தூர்: பள்ளிக்கரணை, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ், (37) காய்கறி வியாபாரி. ஆலந்தூர் மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் தனசேகர் (40) இவரது மகன் அருண்குமார், (19) கல்லூரி மாணவர். இருவரும் மடிப்பாக்கம், ராம்நகர், மெயின்ரோட்டில் பைக்கில் வந்தபோது, பள்ளிக்கரணை பெரியார் நகரைச்சேர்ந்த மோகன்ராஜ் மீது, பைக் மோதியுள்ளது .இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது இதனை மோகன்ராஜ் தட்டிக்கேட்டபோது அருண்குமார் அருகில் இருந்த கல்லை எடுத்து மோகன்ராஜின் தலையில் அடித்ததில் ரத்தம் வழிந்தது.
இதைப்பார்த்த மோகன்ராஜின் நண்பர்கள் ஓடிவந்து தனசேகரையும்,அவரது மகன் அருண்குமாரையும் சரமாரியாக அடித்தும் உதைதும் தாக்கியுள்ளனர் இதில் 2 பேரும் அடிதாங்கமுடியாமல் மயங்கி விழுந்துள்ளனர் இதுகுறித்த தகவல் அறிந்த்தும் மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ, சமூக வலை தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது