சென்னை: சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஹரிஹரா அருண் சோமசங்கருக்கு துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஹரிஹரா அருண் சோமசங்கருக்கு எனது மனம்நிறைந்த நல்வாழ்த்துகள். முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வுயரிய அங்கீகாரம் பெறுவது பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது என கூறினார்.