×

கோயில்களின் அறங்காவலர் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: கோயில்களின் அறங்காவலர் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலின் அறங்காவலர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கோயில் பொறுப்பில் உள்ளவர்களின் விவரங்களை மக்கள் தெரிந்து கொள்வதில்  என்ன தவறு உள்ளது? என்று பெரியநம்பி  நரசிம்ம கோபலன் என்பவர் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், நிர்வாகிகளின் சுயவிவரங்களை கோயில் அறிவிப்புப் பலகையில் ஏன் வெளியிடக் கூடாது? அறங்காவலர்களின் பெயர், தொழில், சுய வருமானம் உள்ளிட்ட விவரங்களை அறிவிப்புப் பலகையில் வெளியிடலாமே? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கோயில்களின் தொடர்பான புகார்களை தெரிவிக்க அதிகாரிகளின் பெயர்களை 8 வாரத்தில் வெளியிட அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில்களின் அறங்காவலர் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. புகார் தெரிவிக்கும் வகையில் அறங்காவலர்களின் செல்போன் எண்களை வெளியிட உத்தரவிட்டுள்ளது.

Tags : trustees ,Treasury , Temple, Treasury, High Court, Order
× RELATED ராசிபுரம் அருகே ரூ.7 கோடி மதிப்பிலான...