×

சரக்கு ஆட்டோவில் தீ விபத்து

மாமல்லபுரம்: சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் முகிலன். வீட்டை காலி செய்து விட்டு மரக்காணத்தில் குடியேருவதற்காக பொருட்களை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார். மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை பூஞ்சேரி அருகே நேற்று அதிகாலை 3 மணிக்கு வந்தபோது, ஆட்டோவின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது, ஆட்டோவை ஓட்டி டிரைவர் சரத்குமார் (23). அவருடன் வந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் உடனடியாக ஆட்டோவில் இருந்து இறங்கியதால் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து உடனடியாக மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.


Tags : Fire accident , Fire accident in a freight auto
× RELATED மூணாறில் தீ விபத்து; 10 வீடுகள் எரிந்து...