×

ஊழியர் வீட்டில் கொள்ளை

ஆவடி: அம்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சுதாகர் (40). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி கோமதி (35). கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோமதி பிரசவத்திற்காக செய்யாறில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன்பிறகு, சுதாகர், தினமும் இரவு வீட்டை பூட்டிவிட்டு அதே குடியிருப்பில் உள்ள அக்கா சரளாதேவி வீட்டுக்கு தூங்கச்சென்று பின்னர் வீட்டுக்கு வருவார். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 10 சவரன் தங்கநகைகள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுதாகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Employee home robbery
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...